ஒரு பூவிற்கு இன்று
பூச்சூடும் நாள்-அந்த
பூவையை வாழ்த்துகிறேன்
பூத்தூவி நான்
உன்னிடம்வாழ்க்கை
கேட்டு வரும் வேளையில்
என்னிடம் வாழ்த்தி
கூறிட நீ கேட்டாய்
உனக்கு
வாழ்த்து ஒன்று நான்
தந்து என் வாழ்க்கையை
கைவிட்டு நின்றேன்
இதயம் இரண்டு
ஒன்றாகும் வேளையில்
ஒரு இதயம்
இங்கு துண்டாகுதே…
கிளைவிட்டு பிரிந்து
சென்றிடும் இலைபோல்
என் காதல்
எனைவிட்டு பறந்து செல்கிறதே….
இலையே நீ
சருகாகும் முன்னே
என் இதயம்
எரிந்து சாம்பலாகிவிடும்….
என்றாவது ஒரு நாள்
உன் வீட்டு வாசலிலே
நான் ஒற்றை
ரோஜாவாக பூத்திருப்பேன்….
உந்தன் கேசத்தின்
வலதோரம் நீ எனை
சூடிடும் வேளையில்
பெண்ணே….
நீ அறியாத என் காதலை
அன்று உன்
செவியோரம் நான் கூறிடுவேன்!
Wednesday, September 5, 2007
Subscribe to:
Post Comments (Atom)
4 comments:
இதயம் இரண்டு
ஒன்றாகும் வேளையில்
ஒரு இதயம்
இங்கு துண்டாகுதே…
அழகான வரிகள் நண்பரே வாழ்த்துக்கள்...
ayyo how nice poem pa
Excellent poem...
Gud da,, carry on.
-Vero.
Post a Comment