மின்னல் கீற்றின்
வெப்பம் தாங்காமல்
மேகக்கூட்டங்களின்
கண்ணீர்துளி..!
Wednesday, October 24, 2007
Monday, October 15, 2007
இரண்டில் ஒன்று
மூன்றாம் பிறையாய் இருந்த
என் காதல் முழுமதியாய்
வளரும் முன்னே முந்திக்கொண்டது
அமாவாசை….
பின்புதான் தெரிந்தது என்
காதல் வளர்பிறை நிலவு அல்ல
தேய்பிறை நிலவு என்று
விழுவதும் பின்பு எழுவதும்
ஒளிர்வதும் இருள் பிடிப்பதும்
நிலவுக்கு என்னவோ இயல்பாய் இருக்கலாம்
இந்த மனதுக்கு…?
கண்களை விற்று ஓவியம் வாங்குவது போல்
என்னை விற்று காதலை வாங்கியது என் நட்பு
இன்று நீயும் இல்லாமல் நானும் இல்லாமல்
எங்கோ தடம் இல்லா பாதை சென்ற குருடன் போல்
நின்று கொண்டிருக்கிறது நமது நட்பு
உன்னில் தெளிவாக நீ இருந்தாய்
உன்னில் தெளியாமல் நான் கலங்கிவிட்டேன்-அய்யோ
என்ன தவறு செய்தேன்
என் எண்ணம் தவறு செய்தேன்
இனி என்ன தவம் செய்தால் இழந்த
நட்பு கிடைக்குமோ நான் என்னை
தகனம் செய்தால்
இழந்த காதலாவது கிடைக்குமா..?
இரண்டில் ஒன்றை யாரேனும்
அவளிடம் பெற்றுத்தாருங்களேன்..!
என் காதல் முழுமதியாய்
வளரும் முன்னே முந்திக்கொண்டது
அமாவாசை….
பின்புதான் தெரிந்தது என்
காதல் வளர்பிறை நிலவு அல்ல
தேய்பிறை நிலவு என்று
விழுவதும் பின்பு எழுவதும்
ஒளிர்வதும் இருள் பிடிப்பதும்
நிலவுக்கு என்னவோ இயல்பாய் இருக்கலாம்
இந்த மனதுக்கு…?
கண்களை விற்று ஓவியம் வாங்குவது போல்
என்னை விற்று காதலை வாங்கியது என் நட்பு
இன்று நீயும் இல்லாமல் நானும் இல்லாமல்
எங்கோ தடம் இல்லா பாதை சென்ற குருடன் போல்
நின்று கொண்டிருக்கிறது நமது நட்பு
உன்னில் தெளிவாக நீ இருந்தாய்
உன்னில் தெளியாமல் நான் கலங்கிவிட்டேன்-அய்யோ
என்ன தவறு செய்தேன்
என் எண்ணம் தவறு செய்தேன்
இனி என்ன தவம் செய்தால் இழந்த
நட்பு கிடைக்குமோ நான் என்னை
தகனம் செய்தால்
இழந்த காதலாவது கிடைக்குமா..?
இரண்டில் ஒன்றை யாரேனும்
அவளிடம் பெற்றுத்தாருங்களேன்..!
Subscribe to:
Posts (Atom)