Wednesday, September 5, 2007

அழுகின்ற இதழ்கள்……

வானவில்லின் ஒருவண்ணம் எடுத்து
சந்தனமும் தங்மும் ஒன்றாக கலந்து
பிரம்மன் செய்து வைத்த அச்சிலே
சிறந்ததை எடுத்து கலவையை ஊற்ற
நான் காதலிக்க உருவானாய் நீ

மல்லிகை மொட்டுகளை மலரவிட்டு
மாலையாக ஒன்றையொன்று சேர்த்து
உன் கருங்குழலில் சூடிய போது
மல்லிகையின் ம்ணம் கூடியது

மதி உதிக்கும் நேரமெல்லாம்
நதி போல உன் நினைவுகள்
என் சிறுநெஞ்சில் ஓடிவிளையாட-என்
சின்னச்சின்ன இன்பங்களை சொல்லத்தெரியவில்லை

விடிந்தால் மறைந்திடும் நிலவுபோல
விழித்தால் விலகிடும் கனவுலகில்
எத்தனை காலங்கள் வாழ்வதென்று
என்னை உன்னிடம் விற்றிட
இதயத்தை பேரம் பேசினேன்

முத்துப்பற்கள் வெளியே தெரியாமல்
சிறு செவ்விதழ்களை ஓரமாக சுழித்து
செல்லாக்காசு உன் இதயம் என்று
சொல்லாமல் சொல்லிவிட்டு சென்றாய்
அதுவரை நில்லாத என் இதயம்
அரை நிமிடம் நின்று துடித்தது

இணையாத தண்டவாளங்களின் வேதனை
என்னவென்று இப்பொழுது உணர்ந்து
இணைத்திட கிடத்தினேன் என்னை
இடைப்பட்ட பகுதியின் முழுவதும்
ஏற்றுக்கொள்ளாத புகைவண்டி
என் மீது தன் கால்கள் பதிக்க
என் உடல் பிரிந்த உயிர் போல்
மீண்டும் பிரிந்தது தண்டவாளம்

என்னை சுற்றி நிற்கும் கூட்டத்தில்
எனக்காகவும் சில கண்ணீர் துளிகள்
துளிகளில் ஒன்று என் விழிகளில் விழ
இறந்தும் என்னுள் ஏதோ மாற்றம்

அழுகின்ற இதழ்கள் அன்று சிரித்திருந்தால்..?