நான் போட்ட பூந்தோட்டம்
நாண்காண்டுகளாய் பூத்துக்குலுங்கியது;
என்னோடு பூத்திருந்த பூக்களெல்லாம்
இன்று புதுப்புது பாதைகளிலே போகிறதே..
காற்று மழை சாரலெல்லாம்
கலகலவென கண்களாலே வரவேற்று
நேற்றுவரை நெஞ்சத்தோடு
நீருடைய பூமி போல் சேர்ந்திருந்தோம்
இன்றோ மாற்று திசைகளெல்லாம் நம்மை
மனதார அழைக்கிறது- நாமிருக்கும்
நட்புலகை விட்டு வேற்றுலகிற்கு
வென்றிட வருக வென்று
நட்பை போற்றி பிரிந்திடுவொம்
நம்நட்பு நாளை இணைத்திடுமென்று;
பிரியாவிடை கொடு எனக்கு
என் பிரியமான தோழியே!
Wednesday, September 5, 2007
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment