கனவுகளோடும் கற்பனைகளோடும்
காத்திருந்த நாட்களையெல்லாம்
நல்ல கவிதையாக கடத்திவிட்ட
இரு மனங்களின் இடப்பறிமாற்றம்
திருமணமாய் இன்று உருமாற்றம்
வாழ்வில்
ஒருமுறை வரும் இந்த சந்தோசம்
முதல்முறை இவர்களுக்கு இன்று
இறைவன் படைப்பில்
இவர்கள் இருவருக்கும் வழங்கப்பட்ட தீர்ப்பு
இங்கே நிறைவேற்றப்படுகிறது இருகரம்
இணைத்து வைக்கப்பட்ட திருமணத்தால்
நிறைவேற்றப்பட்ட தீர்ப்பில்
இராமனுக்கு அணில்போல
என் பங்கும் கொஞ்சம் சேர்ந்திருக்கிறது
இவர்களுக்கு நான் வாழ்த்து சொல்வதனால்!
வாழ்த்துகளை வார்த்தைகளாய் கூறினால்
கேட்கப்படும்போதே.....
மறக்கப்பட்டுவிடும் என்பதால்
வாசகங்களாய் பதிப்பித்து தருகிறேன்
வாழ்க நீவிர் பல்லாண்டு!
Thursday, May 8, 2008
Subscribe to:
Posts (Atom)