Thursday, September 27, 2007

பிரிவு

கிளைகள் உதிர்க்கும் இலைகள்
மரணத்தின் சாசனம் என்றிருந்தேன்
பின்புதான் புரிந்தது...
வசந்தம் பிறப்பதற்காக அவர்கள்
பிரிந்திருந்த காலம் அதுவென்று

அதுபோல்தான்...
எங்களுக்குள் இப்பொழுது
இலையுதிர் கால்ம்-இன்று
பட்டமரம் போல் நான்
காட்சியளித்தாலும் வசந்தம்
வருமென்று எதிர்பார்த்து காத்திருக்கிறேன்....

வந்துவிடு என் தேவதையே!

No comments: