நேற்று மறைந்த அந்திமாலைச் சூரியன்
அதிகாலை ஐந்துமணிக்கு உதயமானது:
அதிக நேரம் உழைப்பதற்கு என்றெண்ணிய
வேளையில்தான் புரிந்தது-இன்று
தேதி பார்த்துவிட்டு வேகவேகமாய்
வந்துள்ளது உனக்கு வாழ்த்து சொல்வதற்கு
இரவு முழுவது காத்திருந்துவிட்டு
விடைபெறும் வேளையில் வாழ்த்துசொல்லிவிட்டு
ஓய்வெடுக்க ஓரமாக சென்றுகொண்டிருந்த
நிலவைப் பார்த்தபோது-கோபத்தால்
இளஞ்சிவப்பு….. சூரியனின் முகத்தில்
வாழ்த்து சொல்ல வழி தெரியாமல்
எப்படியும் பறிக்க வருவாயென்று-ரோஜா
இதழ்களில் படிந்திருந்தது பனித்துளிகள்
பூஞ்சோலைகள் தோறும் தேடிச்சென்று
சுகமான வாசங்களை சேகரித்துக்கொண்டு
வார்த்தையில் சொல்லத் தெரியாத வாழ்த்துக்களை…..
வாசங்களில் சொல்லி நின்றது தென்றல்
எல்லோரும் வாழ்த்துசொல்லிட என்ன
காரணம் என்றெண்ணிய போதுதான் உனக்கே
புரிந்தது உன் பிறந்த நாளென்று
விழிகளின் பிறந்த நாளை இமைகள் மறக்குமா-இதோ
என் வாழ்த்துக்களாய் இந்த கவிதை உனக்கு!
Wednesday, September 5, 2007
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment