Friday, March 13, 2015

ஒரு காதலின் பயணம் - 1

விழுதுகளின் துணையோடு 
வீழ்ந்து விடாது நிலைத்து நிற்கும் 
ஆலமரம் போல் - நீ 
விட்டுச்சென்ற பின்பும் வீழ்ந்து விடாது - உன்
நினைவுகளின் துணையோடு மீண்டும்
என் பயணம்
கவிதைகளின் கைப்பிடித்து....!

Tuesday, March 3, 2015

மனம் கொத்திப் பறவை

நிற்காது சுற்றிக்கொண்டிருக்கும்
பூமியைப்போல் என்னுள் சுற்றிச்
சுழன்று கொண்டிருக்கிறது-அவளின்
கரம் பிடிக்க காத்திருந்த நாட்களின் நினைவுகள்..

மழைத்துளியில் நனைந்த  மரக்கிளையில்
உள்ள பிசுபிசுப்பை போல் -என் மனம்
ஈரப்பசையோடு இருக்கிறது அவளின்
நினைவுகளில் நனைந்து...

ஏனோ...
மணம் செய்ய மனம் இல்லாமல்
மறுத்து சென்றவள் -மனதை
அறுத்துகொண்டிருக்கிறாள் ஒரு
மனம் கொத்திப் பறவையாய்...!

மீண்டும் கவிதைக்கான களத்தில்...!

வறட்சியான காலத்தில் வளர்ச்சி காணாது 
பட்டுப்போய்ருந்த விளைநிலத்தை போல்
வாடிப்போய்ருந்தவன்  
மீண்டும் கவிதைக்கான களத்தில்..!
                                                                                                       -அமைதிப்ரியன்