யார் சொன்னது
சுவற்றில் பட்ட பந்துதான்
மீண்டும் மீண்டும்
திரும்பும் என்று
இதோ….
இங்கு நானிருக்கிறேன்
எத்தனைமுறை நீ
என்னை
உதாசினப்படுத்திய போதும்
என் மனது உன்
நினைவுகளை ஏந்திக்கொண்டு
உன் வாயிலில் காத்துநிற்கின்றது
காலை வணக்கம் சொல்வதற்காக
என்னை விடவா பந்து மேலானது?
Wednesday, September 5, 2007
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment