Friday, February 29, 2008
காதல் வடுக்கள்!!!
இதயத்தில் சுவடுகளாக...
அதை ஸ்பரிசிக்கும்போது-ஏனோ
சொல்ல முடியாத வலியுடன்
ஒரு சுகம்!
என் காதல் பெரியதுதானே..?
முன்பு காட்டப்படாத
அன்பும் காதலும்தான்
காகிதத்தில் கவிதைகளாகவும்
கட்டுரைகளாகவும்
வெளிப்படுகிறது
இந்த வகைதான் என் காதலும் போல!
காற்றிலும் நீரிலும்
காதலியின் காலடி தேடி
அலையவைக்கும் காதல்களுக்கு மத்தியில்
என்னவள் மீது நான் காட்டும் அன்பையும் காதலையும்
அவளுக்கு தெரியாத போதும்
அவளோடு கவிதையில் என்னை
வாழ வைக்கும் என் காதல் பெரியதுதானே!
Thursday, February 28, 2008
என் காதலும்...அவளின் காத்திருப்பும்?
சலசலவென ஓடும் நீரோடையைப்பார்க்கும் போதெல்லாம்
கலகலவென நீ பேசும் பேச்சுதான்
என் நினைவிற்கு வருகிறது...
நீரோடையோடு போராடிப்பார்த்துவிட்டு....
முடியாமல் புதைந்துபோன கூழாங்கல்
நீரில் மோதி மோதி இன்று பளிங்கினைப்போல் காட்சி அளிக்கிறது
நானும் அந்த கூழாங்கற்களைப்போல்தான்
கொஞ்சம் வித்தியாசமாக...
வேண்டுமென்று நினைத்து
மோதிப்பார்த்தேன் காதலுடன்
காதலோ என்னை வேண்டாமென்று சொல்லி
தன்னுள் என்னை மூழ்கடித்துவிட்டது
மீண்டும் மீண்டும் மோதிமூழ்கடிக்கப்பட்ட நானோ
இன்றும் காதலோடுதான் வாழ்கிறேன்
என்னை காதலில் மூழ்கடித்த அவளோ
நிச்சயிக்கப்பட்ட நாளில்வரும் கணவனுக்காக காத்திருக்கிறாள்
Monday, February 25, 2008
சூழ்நிலை மறுப்பில் காதல்
கடற்கரையோரமாய் பதிந்திருக்கும்
காலடிச்சுவடுகளில் நானும்
நாள்தோறும் தேடிப்பார்க்கிறேன்
எனைப் பிரிந்த என் காதல்
இங்கு வந்து சென்றிருக்குமா என்று
ஒருகாலின் சுவடு மட்டும் ஓரிடத்தில்
பதியப்பட்டு மறுகாலின் தடத்தில்
என் பெயர் எழுதி அழிக்கபட்டிருக்கிறது
ஏதோ காரணங்களுக்காக இதழ்கள்
சில விசயங்களை மறுத்தாலும்
இதயம் மறுப்பதில்லை மறைப்பதுமில்லை
என் போல் அவளும் வந்து தேடியிருக்கலாம் என் காலடிச்சுவடுகளை