Monday, February 25, 2008

சூழ்நிலை மறுப்பில் காதல்



கடற்கரையோரமாய் பதிந்திருக்கும்

காலடிச்சுவடுகளில் நானும்

நாள்தோறும் தேடிப்பார்க்கிறேன்

எனைப் பிரிந்த என் காதல்

இங்கு வந்து சென்றிருக்குமா என்று

ஒருகாலின் சுவடு மட்டும் ஓரிடத்தில்

பதியப்பட்டு மறுகாலின் தடத்தில்

என் பெயர் எழுதி அழிக்கபட்டிருக்கிறது

ஏதோ காரணங்களுக்காக இதழ்கள்

சில விசயங்களை மறுத்தாலும்

இதயம் மறுப்பதில்லை மறைப்பதுமில்லை

என் போல் அவளும் வந்து தேடியிருக்கலாம் என் காலடிச்சுவடுகளை

No comments: