கடற்கரையோரமாய் பதிந்திருக்கும்
காலடிச்சுவடுகளில் நானும்
நாள்தோறும் தேடிப்பார்க்கிறேன்
எனைப் பிரிந்த என் காதல்
இங்கு வந்து சென்றிருக்குமா என்று
ஒருகாலின் சுவடு மட்டும் ஓரிடத்தில்
பதியப்பட்டு மறுகாலின் தடத்தில்
என் பெயர் எழுதி அழிக்கபட்டிருக்கிறது
ஏதோ காரணங்களுக்காக இதழ்கள்
சில விசயங்களை மறுத்தாலும்
இதயம் மறுப்பதில்லை மறைப்பதுமில்லை
என் போல் அவளும் வந்து தேடியிருக்கலாம் என் காலடிச்சுவடுகளை
No comments:
Post a Comment