Thursday, February 28, 2008

என் காதலும்...அவளின் காத்திருப்பும்?


சலசலவென ஓடும் நீரோடையைப்பார்க்கும் போதெல்லாம்

கலகலவென நீ பேசும் பேச்சுதான்

என் நினைவிற்கு வருகிறது...

நீரோடையோடு போராடிப்பார்த்துவிட்டு....

முடியாமல் புதைந்துபோன கூழாங்கல்

நீரில் மோதி மோதி இன்று பளிங்கினைப்போல் காட்சி அளிக்கிறது

நானும் அந்த கூழாங்கற்களைப்போல்தான்

கொஞ்சம் வித்தியாசமாக...

வேண்டுமென்று நினைத்து

மோதிப்பார்த்தேன் காதலுடன்

காதலோ என்னை வேண்டாமென்று சொல்லி

தன்னுள் என்னை மூழ்கடித்துவிட்டது

மீண்டும் மீண்டும் மோதிமூழ்கடிக்கப்பட்ட நானோ

இன்றும் காதலோடுதான் வாழ்கிறேன்

என்னை காதலில் மூழ்கடித்த அவளோ

நிச்சயிக்கப்பட்ட நாளில்வரும் கணவனுக்காக காத்திருக்கிறாள்

No comments: