வறட்சியான காலத்தில் வளர்ச்சி காணாது
பட்டுப்போய்ருந்த விளைநிலத்தை போல்
வாடிப்போய்ருந்தவன் மீண்டும் கவிதைக்கான களத்தில்..!
-அமைதிப்ரியன்
சலசலவென்று ஓடும் நீரோடையின் உள்ளே சலனமற்று கிடக்கும் கூழாங்கற்களைப்போல் எனக்குள் கிடக்கும் காதலையும் என் இதயம் பேசும் சில வேதனைகளையும் வாசங்களால் சந்தோசத்தையும் வாடிப்போய் சோகத்தையும் பேசும் மலர்போல் கவிதைகளால் இங்கு நான் பேச வந்துள்ளேன்
No comments:
Post a Comment