Tuesday, March 3, 2015

மனம் கொத்திப் பறவை

நிற்காது சுற்றிக்கொண்டிருக்கும்
பூமியைப்போல் என்னுள் சுற்றிச்
சுழன்று கொண்டிருக்கிறது-அவளின்
கரம் பிடிக்க காத்திருந்த நாட்களின் நினைவுகள்..

மழைத்துளியில் நனைந்த  மரக்கிளையில்
உள்ள பிசுபிசுப்பை போல் -என் மனம்
ஈரப்பசையோடு இருக்கிறது அவளின்
நினைவுகளில் நனைந்து...

ஏனோ...
மணம் செய்ய மனம் இல்லாமல்
மறுத்து சென்றவள் -மனதை
அறுத்துகொண்டிருக்கிறாள் ஒரு
மனம் கொத்திப் பறவையாய்...!

2 comments:

Ilayarajakumaran said...

மென்மையான மனம் கொண்டவராகவே இருக்கிறீர்கள்.

Ilayarajakumaran said...

நிராகரித்த காதலை அலட்சிய படுத்துங்கள்.