Tuesday, February 3, 2009

நீயே சொல்லடி பெண்ணே....!

கனவுகளில் வாழ்ந்த என்னை
கைப்பிடித்து அழைத்து வந்து
நினைவுகளில் வாழவைத்தது உன் காதல் தானே

இதை உன்னிடம் கூறினால்
நட்பில் எப்படி காதல் வரும்
என்று கேட்கிறாய்..

நல்ல நட்பில்தானே புரிதல் இருக்கும்
புரிதலில்தானே காதல் வரும்..
அப்படியெனில் என் காதல் சரிதானே..

என் காதல் தவறு எனில்
கண்டவுடன் வரும் காதலை
என்ன சொல்வது
நீயே சொல்லடி பெண்ணே....!

No comments: