கடல் தாண்டி
ஆண்டு வந்த தமிழ் சமுதாயம்
இன்று கலை இழந்து கவலையோடும்
கண்ணீரோடும் கடலுக்கு நடுவே
அல்லல்படுகிறது
வாழ்வு வேண்டுமென்று வந்தோரெல்லாம்
வசதியாக வாழ்கின்றனர் என் தமிழ்நாட்டிலே
இங்கு வாழ்ந்துவிட்டு சென்ற தமிழீழ
தமிழினமோ தவிக்கிறது தண்ணீருக்கும்
தங்குமிடத்துக்கும்....
எக்காலமும் நிக்காது இக்காலம் வரை
தொடர்கிறது சிங்கள இனவெறியை
ஒருக்காலும் அனுமதியாத சுயமரியாதை
யுத்தம்...
தனித்தமிழ் தேசம் காணும் வரை
இது நிற்காது செல்லும் நித்தம்
அதுவரை நம் தோழர்கள் குடும்பத்தை
அரவணைப்போம் அவர்களுள் ஒருவராக
No comments:
Post a Comment