Friday, November 30, 2007

காதல் என்ன பாவமா..?

இதழ் பிரியாமல் இதழ் மலர்ந்து
சின்னப்புன்னகையால் என்ன நடந்திடுமென்று
எதுவும் தெரியாமல் இருவரும்
சிரித்து வைத்தோம் சின்னப்
புன்னகைதானே என்று

முதல் புன்னகை முதல் வார்த்தையாய்
மாறியபோது தெரிந்திருக்கவில்லை
முடிவில்லா துன்பத்தின் மூலதனம்
இதுவென்று...
வார்த்தை ஒன்று வார்த்தைகளாகி
வாழும் நாளும் வலுப்பெற்று
வந்ததென்றும் சென்றதென்றும் ஏதேதோ
பேசத்தொடங்கிவிட்டோம்
வளர்ந்துவிட்ட நட்புதான் காரணமென்று

நட்பும் ஓர் ஆழ்கடல் என்று தெரியாமல்
மூழ்கிவிட்டோம் முத்துக்குளிப்பதுபோல்
எதையோ பற்றிக்கொண்டு இருவரும்
வெளிவந்துவிட்டோம்...
பற்றியது எதுவென்று பார்த்தபோது
உன்கையில் நட்பின் மறுஉருவம்
என்கையில் காதலின் முழுஉருவம்

உன் கண்ணைக்கண்டு அதில்
என்னைக் கண்டு நான்
காதல் கொண்டேன்-நீயோ
என்னைத் தின்று இருவிழியால்
கொன்று இதழ் மௌனம்
கொண்டாய் அன்று முதல்

காதல் என்ன அவ்வளவு பாவமா...?

2 comments:

Anonymous said...

Excellent!!!!

அமைதிப்ரியன் said...

Thank You Rajalakshmi Subramaniam