புற்களம் எல்லாம் போற்களமாய் மாறி
புத்தன் பூமி இன்று இரத்த பூமியாய்
நித்தம் நித்தம் நிம்மதியின்றி வேகிறது
தமிழரினம் பல நித்திரையிலேயே சாகிறது
முற்போக்கு சிந்தனையில்லா மூடர்களிடமிருந்து
தற்காப்பு வேண்டும் என்றுதான்
தமிழரினம் நிற்காது போராடுகிறது
தமிழ்தேசம் வேண்டுமென்று வாதாடுகிறது
மக்களை எல்லாம் மாக்களாய் கொன்று
சிக்கலை வளர்க்கும் சிங்கள கூட்டம்
செந்தமிழ் எடுத்து வளர்த்த தமிழ்
செல்வன் ஒருவனை இன்று
சிதைத்துவிட்டது சினம் கொண்டு
வட்டமிடும் கழுகுகள் கூட்டம் ஒன்று
வஞ்சினம் உள்மனதில் கொண்டு
திட்டமிட்டு செய்துவிட்ட செயலால்
மட்டற்ற சோகம் இன்று
தமிழர்தம் மனதை ஆள்கிறது நின்று
என் செந்தமிழ் செல்வன் அவன்
சிதைக்கப்படவில்லை...
சுதந்திரப் பூக்கள் கொடுக்க வேண்டிய
வேர்கள் விருட்சமாய் வளர வேண்டுமென்று
வீசி எறியப்படும் உரமாய்
விதைக்கப்பட்டிருக்கிறான்!
amaithipriyan@gmail.com
Monday, November 5, 2007
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment