Monday, December 15, 2008

முவ்வாறு வயதினிலே...?




கண்டதும் கேட்டதும்
கால்கடுக்க நின்றதும்
சென்றதும் வென்றதும்
சிதிலடைந்த நெஞ்சத்தைக் கொன்றதும்
என்று எல்லாம் கண்டுவிட்டேன் காதலில்
நீயோ என்னைக் கொண்டு
விட்டுவிட்டாய் சாதலில்

பார்த்தேன் ரசித்தேன் பழகினேன்
பருவத்தில் காதல்தனில் பூத்தேன்
பாவம் வேறென்ன நான் செய்தேன்
என் உருவம் கெடுத்து அருவம் கொடுத்தாயே

அழுதேனே உன்னைத்தொழுதேனே
உன்னில் விழுந்தேனே பின்பு
எழுந்தேனே புதிதாய் விளைந்தேனே
நான்........... நீயோ
என்னை இகழ்ந்தாயே
எச்சில் உமிழ்ந்தாயே
கண்ணில் கர்வம் சுமந்தாயே

கற்றதும் பெற்றதும்
கண்ணீரால் கன்னத்தைச் சுட்டதும்
எடுத்ததும் கொடுத்ததும்
உன்னில் என்னைத் தொடுத்ததும்
என்று எல்லாம் முடிந்துவிட்டது
என் வாழ்வில்.....எங்கோ
நடந்துவிட்ட உன் திருமணத்தால்

அவ்வாறு நடந்துவிட்ட திருமணத்தால்
இவ்வாறு பிதற்றுகிறேன் பித்துபிடித்து
எவ்வாறு இனி நான் வாழ்வது - இதற்கு
முவ்வாறு வயதினிலேயே நான்
மூச்சை இழந்திருக்கலாம்.........!

No comments: